கரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் திறப்பு
கரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சின்மயா மிசன் சுவாமிகள் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந. பிரபாகரன் கிளிநொச்சி மக்கள் வங்கியின் முகாமையாளர் க.பிரதீப்
சபையின் உபதவிசாளர் தவபாலன் சபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி சந்தைச்சேவா சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த அலுவலக கட்டிடத் தொகுதி ரூபாய் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை