நுண்கடனுக்கு எதிராக வவுனியாவில்ஆர்பாட்டம்
நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி, வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, இன்று (30) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றத்தின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், நாடு பூராகவும் 28 இலட்சம் பெண்கள் நுண்நிதி கம்பனிகளின் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும் நிம்மதியை இழந்து, நித்திரையை இழந்து தவிக்கும் தமது பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துக்களேதுமில்லை