திருக்கோவில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த பியசேன கிருத்திகன்..!!!
திருக்கோவில்விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடத்தில்கடந்த[ 2015] ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக விஞ்ஞான பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று வரை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்நீர் வழங்கல் அமைச்சின் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்
மேலும் மிக விரைவில் பாதிக்கப்பட்ட கட்டிடத்தினை புனர்நிர்மானம் செய்து தருவதாக ஆளுநர் அவர்கள் உறுதி அளித்தார்.இச் சந்திப்பில் பாடசாலை அதிபர் தி.புஷ்பராசா அவர்களும் கலந்து கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை