மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில் அமைந்துள்ள அன்னாரது சிலையருகில், குறித்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன்.செல்வராஜா, மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், தவிசாளர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், கட்சி மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.