சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் நாட்டை
வந்தடைந்துள்ளன.

அதன்படி பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -869 என்ற
விமானத்தில்  கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சீனாவின் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகளை தற்சமயம் சிறப்பு குளர்சாதனவசதிகளுடன் கூடிய லொறிகளில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுக்குகொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.