யாழில் மேலும் 13 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டுக் கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து 117 பேர் இன்று முற்பகல் வரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 541 பேரின் மாதிரிகள் முள்ளேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றில் 13 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று காலை அறிக்கை கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆயிரத்து 440 பேரிடம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரண்டு நாள்களில் பெறப்பட்டன.

அவற்றில் இதுவரை 35 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.