காத்தான்குடியில் இருவர் கைது!

சமூக வலைத்தளங்களில் இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் கருத்துக்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் இருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும்  கடந்த நவம்பர் 21ஆம் திகதி கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 29 வயதுடைய 06 பேரில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வன் உம்மா என்கிற வாட்ஸப் குழுவை அமைத்து கட்டாரில் இருந்துகொண்டு வஹாபிசத்தைப் பரப்பியதாகவும், வீடியோக்களையும் ஷெயார் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பிரதாயமான முஸ்லிம்களின் மனதில் விரிசலை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் பய்ஙகரவாத விசாரணைப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஏற்கனவே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற தகவலை தொடர்ந்தே இந்த சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.