புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நெடுந்துார பிரயாணத்திற்காக 200 பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு 21 தொடருந்து சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி முதல் விசேட தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பதில் பொது முகாமையாளரான டப்ளியூ.ஏ.டீ.எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.