இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்நீதி நூல்கள் வழங்கும் அறிமுக விழா…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகமும், அறநெறிப் பாடசாலைகளும் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கு நீதி நூல்கள் மற்றும் துணைநூல்கள் வழங்கும் அறிமுக விழா 04.04.2021  ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு திருக்கோவில் பிரதேச செயலக கட்டிடத்தில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னிலை அதிதியாக இந்துமத குருமார்கள், பிரதம அதிதியாக திரு.வே.ஜெகதீசன் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், சிறப்பு அதிதியாக, உதவிப் பிரதேச செயலாளர் திரு.கே. சதிஸ்சேகரன், கணக்காளர் திரு. எஸ். அரசரெட்ணம், நிர்வாக உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர், திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ் ரவீந்திரன், பாடசாலைகளின் அதிபர்கள், இந்து மன்றங்களின் தலைவர்கள், ஆலயதர்மகர்த்தாக்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.