உடனடியாக அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை!

உடனடியாக அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவு வெளியாக்கப்படவுள்ளது.

அதேநேரம் தற்போது நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பாம் எண்ணெய் உற்பத்திக்கான செம்பனை மரங்களை கட்டம் கட்டமாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.