பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 14 க்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான உரிய திகதி குறித்து தற்சமயம் விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழங்களுக்கான சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.