அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

(எம்.என்.எம்.அப்ராஸ்)

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட செயலகத்தினால் விசேஷட பொது மக்களுக்கான நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்தின வழிகாட்டலில் கீழ் கல்முனை பொதுச் சந்தை மற்றும் பஸ் தரிப்பு
இன்று( 07) நிலையித்தில் இடம் பெற்றது.

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் அதுபோன்று அவர்களுடைய பொறுப்புகள் அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக எவ்வாறு முறையிடுவது ,இதில்  எவ்வாறு நிவாரணம் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக இன்று இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்றது

இதில் புலன் விசாரணை அதிகாரிகளான டி.சுதர்சன், தர்மலிங்கம் மேன்டீஸ், செட். எம் ஸாஜீத்,எஸ்.எம். றஸ்லான்,எம்.எம்.ஏ. சுபைஹீர்,ஏ.எஸ்.எஸ்.அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கான பாவனையாளர் பாதுகாப்பு வழிகாட்டி மற்றும் விழிப்புணர்வு நிகழ்சியினை மேற்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.