யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவை மீள திறக்க அனுமதிப்பு

யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீளத் திறப்பதற்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர மத்தியில் இருந்த வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே சுமார் 70 வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார மருத்துவ  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்.மாநகர மத்திய பேருந்து நிலையத்தில் இன்று முதல் பேருந்து சேவைகளை நடத்த வட.பிராந்திய போக்குவரத்து சபைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து சேவைகளின்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.