புத்தாண்டு பண்டிகையினை முன்னிட்டு வவுனியா நகர் முழுவதும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்

தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகையினை முன்னிட்டு வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமையுடன் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
பண்டிகை காலமாக கருதப்படும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 16 ஆம் திகதிவரையிலான 10 நாட்களிலேயே அதிகளவு வீதி விபத்துக்கள் , திருட்டு சம்பவங்கள் , கொரோனா தொற்று முகக்கவசம் அணியாமை , வீதி நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையுடன் துவிச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.