வவுனியா வேப்பங்குளத்தில் அன்பான வணிகன் புதுவருட விற்பனைச்சந்தை  திறந்து வைப்பு

வவுனியா வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியினால் அன்பான வணிகன் எனும் தொனிப்பொருளில் புதுவருட விற்பனைச்சந்தை வேப்பங்குளம் சமூர்த்தி வங்கிக்கு முன்பாக இன்று (10) காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இன்று மற்றும் நாளை (10,11) ஆகிய இரு தினங்களும் இயங்கவுள்ள புதுவருட விற்பனைச்சந்தையினை பாராளுமன்ற உறுப்பினர்கள் , பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் தலமையில் இடம்பெற்ற  பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலிபன் , கௌரவ விருந்தினராக விநோதரலிங்கம்  மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த புதுவருட விற்பனைச்சந்தையில் மரக்கறி வியாபார நிலையம் , ஆடை விற்பனையகம் , உணவு பொருட்கள் , பண்பாண்டங்கள் என பல சந்தைகள் அமைந்துள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.