5 நாட்களில் 52 உயிர்களை காவுக்கொண்ட வாகன விபத்துக்கள்

நாட்டில் கடந்த 5 தினங்களில் மாத்திரம் 399 வாகன விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 13ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன்படி, கடந்த 5 நாட்கள் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இந்த விபத்துக்களில் 669 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வாகன விபத்துக்கள் தொடர்பில் 2242 வாகனங்களை பொலிஸார் தமது பொறுப்பிற்கு பொலிஸார் எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.