வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும்; அரச அதிபர்

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும் என மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தின் இறுதிக் கட்ட வேலைகளை பார்வையிட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன், 200 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இன்றைய தினம்       சமூக ஆர்வலர்    தமிழ் விருட்சம் கண்ணா 5.அபிராமி  அரக்கட்டளை மகாதேவன்10.ராம் பவுன்டேசன்5.பாாாகியம் அரக்கட்டளை10

 30 மின் விசிறிகளை குறித்த சிகிச்ஞை நிலையத்திற்காக வழங்கியுள்ளனர். அதனை நாம் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்த முடியும்.

இந்தநிலையில், வவுனியா பொருளாதார நிலையம் கொரோனா நோயாளர்களை உள்வாங்குவதற்கு தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதுடன், நாளை முதல் நோயாளர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.