மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகரை தகாதவார்த்தைகளால் அச்சுறுத்தியவர் கைது !

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுசுகாதார உத்தியோகத்தர் ஒருவரையும் பிராந்திய பணிப்பாளர் மற்றும் ஜனாதிபதியையும் தொலைபேசியில் தகாதவார்த்தைகளால் பேசி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் அச்சுறுத்தலை தொடர்ந்து பொது சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறுவித்தல் வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட்திருந்தனர்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று 12.30 மணியுடன் தமது பணி புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிடப்பட்டதாக மாவட்ட பொது சுகாதார சங்கத்தலைவர் சி.சிவகாந்தன் தெரிவித்தார்.

இது குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.