மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!
நாட்டில் மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
இந்த மரணங்கள் கடந்த ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜூன் இரண்டாம் திகதி வரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 20 ஆண்களும் 19 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 1 566ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை