யாழ் கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருட்டு !!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு முதலாம் குறுக்கு தெரு வீதி வீடு ஒன்றில் பணம் மற்றும் கைத்தொலைபேசி   திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு முதலாம் குறுக்கு தெரு வீதியிலுள்ள  வீடொன்றில்  இன்று  (18-09-2021)  புதன்கிழமை மதியம் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர்  வீட்டில் இல்லாத சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் உட்புகுந்து தனது கைவரிசையை காட்டியதோடு  வீட்டில்  இருந்த பெறுமதிமிக்க கைத்தொலைபேசி மற்றும் ரூபா65000.00  பணத்தையும் திருடிச்சென்றுள்ளார்.
குறித்த திருட்டு தொடர்பாக கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.