கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 23ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 195 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்தனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.