புத்தாக்க அரங்க இயக்கம் வாராந்தம் நடத்தும் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வு…

புத்தாக்க அரங்க இயக்கம் வாராந்தம் நடத்தும் இணையவழி  அரங்க கதையாடல் நிகழ்வில் கதையாடல் 9  நிகழ்வு 05.9.2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின்  பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந் நிகழ்வில் அடிப்புற அரங்க செயற்பாட்டு அமைப்பின் உபதலைவர் வைரவா கலைக்கழகத்தின் தலைவர் மட்டக்களப்பு முருகன்தீவு சிவசக்தி வித்தியாலய ஆசிரியர் அழகு தனு  மட்டக்களப்பு அடிப்புற அரங்கச் செயற்பாட்டு அமைப்பின் செயற்பாடுகளும் இராமநாடகக் கூத்தின் ஆற்றுகை அனுபவப் பகிர்வும் என்னும் விடயத்தில்  கதையாடவுள்ளார் .
ஏற்புரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின்  நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.
இவ் இணையவழி அரங்க கதையாடல்  நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 73534935699 கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.