இந்தியாவில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 57 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் வைஸ் தொற்றினால் ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 39 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34 ஆயிரத்து 791 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 இலட்சத்து 63 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு, 3 இலட்சத்து 99 ஆயிரத்து 778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.