அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

உலகில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தல் பட்டிலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.

நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளிலேயே இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளதுடன், ஈக்வடோர் 12.5 சதவீதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா ஆகியன முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.

இதேவேளை குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள சீன தூதரகம், இலங்கைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.