ஈழத்தின் மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்..

ஈழத்தின் மிக முக்கியமான மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் (வயது – 72) இன்று (16) திருகோணமலையில் காலமானார்.
யாழ்ப்பாணம் மட்டுவில் சாவக்கச்சேரியில் 1949-05-25 ல் பிறந்த இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவர் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலக்கியமே மூச்சு என வாழ்ந்து கொண்டிருந்தவர்.
கொடகே தேசிய சாகித்திய விருது , கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது,  கலாபூசணம் அரச உயர் விருது ஆகிய உயர் விருதுகளை பெற்றவர்.
அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் , நெல்லிமரப்பள்ளிக்கூடம் இரண்டும் அவரது மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள்.
ஈழத்து இலக்கியத்தை எழுதும் எவரும் நந்தினி சேவியர் என்ற பெயரை தவிர்க்கவியலாது என்பதே அவரது அடையாளம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.