இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அம்பாரை மாவட்ட ஆலயங்களுக்கு காசோலையை வழங்கி வைப்பு…

அரசாங்கத்தின் கொள்கை சட்டமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின்கீழ் பிரதமரும் மற்றும் மதவிவகார அலுவல்கள் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களது வழிகாட்டுதலின்கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட கல்முனை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கான கொடுப்பனவு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காசோலையை வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்துகொண்டதுடன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்,கல்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர்கள், ஆலய அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.