இந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 இலட்சத்து 76 ஆயிரத்து 319 ஆக காணப்படுகின்றது.

மேலும் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3 இலட்சத்து 1,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.