இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 ஆயிரத்து 326 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 52 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 46ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26 ஆயிரத்து 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 2 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நாடு முழுவதும்  3 இலட்சத்து 3 ஆயிரத்து 476 பேர் வைரஸ் தொற்றுக்கு பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.