வானிலை தொடர்பான அறிவித்தல்

இலங்கையின் இன்றைய வானிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுக்கூறியுள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வுக்கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

குறிப்பாக மத்திய மலைகளின் மேற்கு சாய்வு, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் காற்றின் வேகம் 50-60கிமீ வேகத்தில் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வை வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.