குழந்தையின் பெயரை வெளியிட்டார் ஆர்யா: குவியும் வாழ்த்துக்கள்!

தனது குழந்தையின் பெயரை வெளியிட்ட நடிகர் ஆர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகும் நிலையில், முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளார் ஆர்யா. அதன்படி அக்குழந்தைக்கு ‘ஆரியானா’ என பெயரிட்டுள்ளனர். இதையடுத்து ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது எனிமி, அரண்மனை 3 ஆகிய படங்கள் உருவாகி உள்ளன. இந்த இரண்டு படங்களும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திக தி ஆயுத பூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.