காரைதீவில் வீடு சேதமடைத்தோருக்கு நிவாரணமளிப்பு !
அனர்த்த நிவாரண சேவை அமைச்சினால் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக கடந்த ஜூன், ஜூலை மாதம்களில் வீடு சேதமடைந்த பத்து பயனாளிகளுக்கான ரூபாய் 10000 முதற்கட்ட காசோலை காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இன்று (28) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கணக்காளர் என்.ஜய சர்மிகா மற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை