மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 231 வது படைப்பிரிவினரால் மீண்டும் மருத்துவ உபகரணத் தொகுதி வழங்கி வைப்பு…

மட்டக்களப்பு  231 வது இராணுவ படைப்பிரிவினரால் மூன்றாவது தடவையாகவும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணத் தொகுதி இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை காலாட் இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க   அமெரிக்காவில் வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை உறவுகளினால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணம் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று இலட்சம் பெறுமதியான ஒட்ஸிஜன் செறிவாக்கி மற்றும் கொவிட் 19   தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணத் தொகுதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கத்திடம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள 231வது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான பிறிகேடியர் கேணல் டிலூப பண்டார   தலைமையில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லடி 231வது இராணுவ படையணியின் இராணுவ அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை காலாட் இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவில்  வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை உறவுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியாசாலைகள் பலவற்றிற்கு இவ்வாறாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.