கந்தளாய் புகையிரத கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் மரணம் காரின் சாரதி படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில்

திருகோணமலை கந்தளாய் புகையிரத கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த  கார் ஒன்று  மோதி விபத்துக்குள்ளானதில்  பொலிஸ் அதிகாரியொருவர் மரணம் காரின் சாரதி படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் ஸ்தலத்திலே மரமாகியுள்ளதோடு, காரின் சாரதியும்  பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர்  படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அதிதீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு(11) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன 55 வயதுடைய பொலிஸ் உதௌதியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து கந்தளாயிக்குச் சென்ற கார் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட  போத இவ்வாறு விபத்துக்குள்ளான தாகவும்
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.