மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு கடிதம் அனுப்பிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் !

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாதுன் நபி விழாவினை ஒட்டி எதிர்வரும் 18,19,20 ஆகிய தினங்களுக்கு அல்லது மீலாதுன் நபி தினத்தன்று மட்டுமாவது பள்ளிவாசல்களை மின் குமிழ்களினால் அலங்கரிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எம் எல் எம் அமீர் அலி சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அந்த தினத்தை சிறப்பிக்குமுகமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நரநடுகையில் ஈடுபடுமாறும், மீலாதுன் நபி விழா தொடர்பிலான பதாதைகளை காட்சிப்படுத்துமாறும் அந்த கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.