சம்மாந்துறையில் பொது இடங்களில் குப்பை சேகரிக்கும் ரம் கையளிப்பு

(எம்.எம்.ஜபீர்)
“எமது நகரை சுத்தமாக வைப்போம்” எனும் தொனிப்பொருளில் சர்வோதய நிறுவனத்தினால்  சம்மாந்துறை பிரதேச சபைக்கு பொது இடங்களில் குப்பை சேகரிக்கும்  5 ரம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
சர்வோதய நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஏ.எஸ்.அபேரத்னவினால் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல் ஆகியோரிடம் கையளித்தனர்.
இதில் சம்மாந்துறை நிழல் பிரதேச சபை தவிசாளர் ஏ.உதுமாலெவ்வை, நிழல் பிரதேச சபை செயலாளர் ஏ.ஆர்.எம்.இர்பான், சர்வோதய நிறுவனத்தின் சமூக நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.எச்.எம்.பைசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்வோதய நிறுவனத்தின் சம்மாந்துறை நிழல் பிரதேச சபை உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ் குப்பை சேகரிக்கும் ரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.