கிளிநொச்சியில் வியாபார நிலையத்தை பூட்டிவிட்டு வீடு சென்றவர் மீது வாள்வெட்டு

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 23.10.2021 சனிக்கிழமை அன்று இரவு கனகபுரம் வீதியில் உள்ள தனது வர்த்தக நிலையத்தை பூட்டிவிட்டு ஆனந்தநகரில் உள்ள தனது இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்தவரை கிளிநொச்சி அம்பாள்குள பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குழு ஒன்று அவரை இடைமறித்துள்ளது. தன்னை சுதாகரித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றார். அவர்கள் இடைமறித்த போது நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த குறித்த குழுவினர் அவரைப் பின்தொடர்ந்து சென்று ஆனந்த நகரில் உள்ள அவரின் வீடுவரை சென்று வீட்டில் வாகனத்தை நிறுத்தியவேளை வீட்டு வாசலில் வைத்து அவரின் மீது வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகியவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீசார் நேற்றைய தினம் வைத்தியசாலையில் வைத்து வாள் வெட்டுக்கு இலக்காகியவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.