நீதிமன்றங்களை அவமதித்து, சட்டத்தை மதிக்கத்தவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” இயற்றும் குழுவுக்கு நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
அந்த அறிக்கையில் மேலும், இது நாட்டில் சட்டம் இயற்றும் துறை சம்பந்தமாக சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை சட்ட வரைஞர் திணைக்களம், சட்டமேதகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் என பலரும் இருக்கத்தக்கதாக இப்போது இந்த விடயத்தை தலைமையேற்று வழிநடத்த சட்டம் சம்பந்தமான எவ்வித அறிவுமில்லாத பல வழக்குகளில் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை பெற்ற ஒருவரான மதப்பிரிவொன்றின் போதகரை நியமித்து ஒரே நாடு ஒரே சட்டம் எனும் முக்கிய வரைபை கட்டமைக்கும் பொறுப்பை கையளித்திருப்பதை எவ்விதத்திலும் அறிவு சார்ந்த சமூகமும், நாட்டில் நிலையான சமாதானத்தை விரும்பும் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்த நாட்டின் இன ஐக்கியத்திற்கு எதிராக யார் பேசிவருகிறாரோ, குழப்பவாதியாக மக்களால் யார் அடையாளப்படுத்தப்படுகிறாரோ அவரையே இங்கு முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். அண்மையில் கூட அவர் மதநிந்தனையும், இறை நிந்தனையும் செய்து சமூகங்களுக்கிடையில் மனக்கசப்புக்களை தோற்றுவித்தவர். அவரை இந்த பதவிக்கு நியமித்திருப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதுடன் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பிலான பலத்த கண்டனங்களை அரசாங்கத்தின் பொறுப்புதாரிகளுக்கு தெரிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை