பங்களாதேஷில் கொல்லப்பட்ட இந்துக்களுக்காக மட்டக்களப்பில் அஞ்சலி..
பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி 29.10.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி க்கு நாட்டிலுள்ள இந்து ஆலையங்கலில் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனை மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.
உலகிலே எங்காவது ஒரு மூலையில் இந்துக்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அது நமக்கு ஏற்பட்ட துன்பமாக கருதவேண்டும் அப்போது மட்டும் தான் நீ உண்மையான இந்துவாகும் என சுவாமி விவேகானந்தர் கூறினார்.
இந்த தாக்குதலில் சுவாமி நிதிதாஸ் பிரபு உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன். 550 வீடுகள், 442 கடைகள், தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 861 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் பல பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதுடன் 1608 இந்து மற்றும் பௌத்த விகாரைகள். இராமகிருஸ்ண மிஷன், உட்பட வணக்கஸ்தலங்கள் உட்பட 51 அம்மன் சக்தி பீடங்களில் இரண்டான தாட்சாயினுடைய 50 வது சக்தி பீடமான அவரது வலதுகை வீழ்ந்த இடம் , நாக்கு வீழ்ந்த இடமான இரு சக்தி பீடங்கள் தாக்கப்பட்டுள்ளது
இவ்வாறு இந்த நவராத்திரி தினத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலை இலங்கை வாழ் இந்துக்கள், இந்து அமைப்புக்கள், இந்து ஆலயங்கள், சிறுவர்கள், இந்து நிறுவனங்கள் கூட்டமைப்பாக இதற்கு கடும் கண்டனத்தினை தெரிவித்துக் கொண்டது.
அதேவேளை இவ்வாறான இந்துக்களுக்கு எதிராக இம்பெற்ற இந்த தாக்குதலை கண்டித்தும் அந்த தாக்குதலில் உயிர் நீத்த ஏமது உறவுகளுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் கனவயீர்பு ஆர்ப்பாட்டமானது 29 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் மேலும் நாடளாவிய ரீதியிலும் ஆலயங்களுக்கு முன்னால் விளக்கேற்றல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனவே இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்க இன்றைய தினம் நாட்டிலுள்ள இந்து ஆலயங்களுக்கு முன்னால் அகழ்விழக்கு ஏற்றி கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை