ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்தமானி

துறைமுக சேவை, பெற்றோலிய வள சேவை, தபால்சேவை, போக்குவரத்து சேவை உள்ளிட்ட சில துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.1979ம் ஆண்டு அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் 2ம் சரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பெற்றோலிய வளச் சேவை, எரிபொருள் விநியோகம், பொருட்கள் விநியோகம், பயணிகள் போக்குவரத்து, இலங்கை மத்திய வங்கி, அனைத்து அரச வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.