புங்குடுதீவில் காணி சுவீகரிப்பு.

யாழ் புங்குடுதீவில் எதிர்வரும்  திங்களன்று (08.11. 2021) புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான  காணிகள்  கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளன .

 அதேபோன்று எதிர்வரும் 09 – 11- 2021 அன்று புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கடற்கரையினை அண்டிய பகுதியில் மணியம் தோட்ட வீதியை அண்மித்ததாக  கடற்படையினரின் தேவைகளுக்காக காணியொன்றும் சுவீகரிக்கப்படவுள்ளது . கடந்த காலங்களில்  இரு தடவைகள் இக்காணிகளை கடற்படையினர் சுவீகரிக்க முயன்றபோதிலும்  தாம் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்முயற்சி இடைநிறுத்தப்பட்டதாகவும் மீளவும் தற்போது  முன்னெடுக்கப்படவுள்ள மேற்படி காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கு  அனைவரையும்  அவ்விடத்தில் ஒன்றுகூடுமாறும்  தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.