நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை செலுத்த அன்று கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்தார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம்  பில்லியன் கணக்கில்   பணம்   இருக்கிறது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும்  நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை செலுத்த அன்று கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்தார்.
–  ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
 அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி இலகுவாக செல்லக் கூடிய வகையில் அனைத்து உள்ளக மற்றும் கிராமிய வீதிகள் 100,000 கிலோமீற்றர்  அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவு செய்யப்பட்ட  1500 வீதிகள்  ‘சுபீட்சத்தின்  வீதிப் புரட்சி. பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ‘ எனும் தொனிப்பொருளின் கீழ்  ஒரே நாளில் மக்களிடம் கையளிக்கும் ஆரம்ப வைபவம்   அதிமேதகு ஜனாதிபதி மற்றும் அதிமேதகு பிரதமர் ஆகியோரின் தலைமையில்  கடந்த      2021-11-06  ஆம் திகதி சனிக்கிழமை வீரகெட்டிய மைதானத்தில்   நடைபெற்றது.
 இந்த நிகழ்வில்  உரையாற்றிய  ஆளும் தரப்பு  கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, உங்களால் முன்வைக்கப்பட்ட சுபீட்ச நோக்கு கொள்கை பிரகடனத்தில்   100,000 கிலோ மீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என இந்நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குள்,  உங்களுக்கு கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது உங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான பாராளுமன்றத் தேர்தலை நடத்த   முடிவு செய்தபோது, ​​தேர்தலை நிறுத்தக் கோரி எதிரணியினர்  நீதிமன்றத்துக்கும் சென்றனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை  மீளச்செலுத்த நடவடிக்கை எடுத்தீர்கள். கோவிட் நெருக்கடியால் நாட்டின்  அபிவிருத்திப் பணிகளைத்  நிறுத்த  நீங்கள்  ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தங்கள்   இடுப்புப் பட்டிகளை  இறுக்கிக் கொள்ள  வரலாற்றில்  சில அரசாங்க  தலைவர்கள்  அழைப்பு விடுத்தார்கள் . ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவாறே  நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்தார். நாட்டின் பொருளாதாரத்தை  வலுப்படுத்தினார். 2015ஆம் ஆண்டு இந்த நாடு கையளிக்கப்பட்ட போது, ​​எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்தது. ஆனால், கோட்டாபய ராஜபக்ச 2019 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டை  தான் பொறுப்பேற்றார். அந்த சமயம்  தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்து  இனங்களுக்கிடையில்  பிளவு  ஏற்பட்டிருந்தது.
கோத்தபாய ராஜபக்ச தோல்வியடைந்தவர் என்ற தவறான கருத்தை எதிர்க்கட்சிகள் சமூகத்தில் பரப்பி  வருகின்றன. நாட்டுக்கு தடுப்பூசிகளை கொண்டு வர வழியில்லை என்றனர். நாட்டில் தடுப்பூசி வழங்குவதை  நடைமுறைப்படுத்த முறையான  வழி இல்லை என்றனர். ஆனால் உங்கள்   தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ்  இன்று வெற்றிகரமாக தடுப்பூசி  ஏற்றிய  முதல் 10 நாடுகளிடையே எமது நாடு உள்ளது. கோவிட் தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றிய தலைவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள். நீங்கள்   மென்மையான   தலைவர் என்று நான் மறுநாள் சொன்னேன். அதாவது நீங்கள் மிகவும் உணர்வுபூர்வமான   தலைவர். மேலும் மிகவும்  கவனமாக செயல்படும் தலைவர் என்பதால் தான்  தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவர் என்று மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றுள்ளீர்கள்.
கோவிட் நெருக்கடி இருந்த நிலை  இருந்த போதிலும் நாட்டின் நெடுஞ்சாலை அபிவிருத்திகளை  தொடர   எங்களுக்கு அறிவுறுத்தினார். நாட்டில் கொடிய  தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் அவ்வப்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திய போதிலும், நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது.இதன் காரணமாக இந்த 1500 வீதிகளை மக்களிடம் கையளிக்க முடிந்துள்ளது.  கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியின் காரணமாகவே கொவிட் தொற்று எமது நாட்டிற்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. கோவிட் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று எமக்குத் தெரியாது.    ஆனால் இந்த நாட்டை நாம் தொடர்ந்து அபிவிருத்தி செய்து வருகிறோம். மாணவர்களுக்கு  இடையூறு இல்லாமல் பாடசாலைக்குச் செல்லவும், நோயாளிகளை தாமதமின்றி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும், விவசாயிகள் தங்கள் விவசாயப் பொருட்களை பொருளாதார மையங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லவும் இந்தப் பாதைகள்  உதவும். அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68000 வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 14,000  வீதிகளின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 1500  வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு   மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2,500  வீதிகள்  திறக்கப்படும்.
இந்நாட்டின் வீதிக்கட்டடமைப்பை போன்றே  விவசாயிகளுக்கு  நீர் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டு மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பாரிய திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சேதனப் பசளை  பயன்படுத்தி நம் நாட்டை பசுமை நாடாக மாற்ற விவசாயிகளிடம் கோரிக்கை  விடுத்தோம். இரசாயனப் பசளைக்கு பதிலாக சேதனப் பசளைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெறும் என நம்புகிறோம். இத்திட்டம் வெற்றி பெறுவதை விரும்பாதவர்கள் இதற்கு எதிராக செயற்படுகின்றனர். நாங்கள் அமைத்த வீதிகளில் சென்று போராட்டம் நடத்துகிறார்கள். மக்கள் செத்து மடிவதைப்  காண விரும்பும்  ஐம்பத்தைந்து  இலட்சம் வாக்குகள் உள்ளவர்களுக்கு இருநூறு முந்நூறு பேரை இத்தகைய போராட்டங்களுக்குக் கொண்டு வருவது ஒன்றும் சிரமமில்லை. நாங்கள் அரசியல் செய்தவாறே    நாட்டு மக்களை பாதுகாக்கிறோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்ற  நாம் நடவடிக்கை எடுப்போம்.
ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய்கள் உள்ளன. அது ஒடுக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் ஒரு முதலாளித்துவ அரசியல் கட்சி. பணத்திற்காக எதையும் செய்வார்கள். அதனால் அவர்களின் ஆறு மூன்றாக குறைந்தது. இந்த நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதிக்கு எமது பூரண  ஒத்துழைப்பை  வழங்குவோம்.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின்  உப  தலைவர் டொக்டர் ஹார்ட்விக் செஃப்வை கௌரவத்துடன் வரவேற்கிறோம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியான கலாநிதி சென் சென் அவர்களின் வருகையையும் நான் மரியாதையுடன் வரவேற்கிறேன். கிராமிய மற்றும் நகர்ப்புற இணைப்புத் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு உலக வங்கி எடுத்த தீர்மானத்திற்கு நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தருணத்தில், இந்த உதவியின் கீழ் வழங்கப்படும் நிதியை நவீன  வீதிக்கட்டமைப்பை  உருவாக்கி, நமது நாட்டை  அபிவிருத்தி அடைந்த  நாடாக மாற்றுவதற்கும்  அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என  உறுதியளிக்கிறேன். இவற்றையெல்லாம் மக்களுக்கு வழங்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது. மேலும்,  வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற  வீதிகளை அமைப்பதற்கு ஆசிய  அபிவிருத்தி  வங்கி எங்களுக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்துள்ளது. எனவே, இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன தொடர்ந்து ஆதரவளிக்கும் என நம்புகின்றோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகளினால் இந்த நாட்டில் ஒப்பந்த நிறுவனங்கள் நாசமடைந்தன. எவ்வாறாயினும், இந்த நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவதன்  காரணமாக அவை மீண்டும் பலமடைந்து வருகின்றன. அதிவேக நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகளுக்கு கல் பதித்தல் போன்ற புதிய   புதிய யோசனைகளை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நீங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து  யோசனைகளையும் உங்கள் சகோதரருடன்  இணைந்து நாம் தொடர்ந்து  முன்னெடுத்து வருகிறோம். . மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் மற்றும் புதிய களனி பாலம் திட்டம் என்பன  இம்மாதம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வீதிகள் அமைத்தாலும் ஏசுகின்றனர். வீதிகள்    அமைக்காவிட்டாலும் ஏசுகின்றனர். அத்தகைய எதிக்கட்சி தான் இன்றிருக்கிறது.   உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டாகட்டும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.