மட்டக்களப்பு ஆயர், அருட்தந்தையர்கள் உட்பட அரசியற் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு நீதி மன்றத் தடையுத்தரவு கோரி மட்டு தலைமையகப் பொலிசாரால் அறிக்கை சமர்ப்பிப்பு…
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.கே.கெட்டியாராச்சி அவர்களினால் இவ்வறிக்கை இன்றைய தினம் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும நாட்களில் மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் வடக்கு கிழக்கு ஆயர்களினால் 20ம் திகதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடர்பான அறிக்கை என்பவற்றை மைய்படுத்தி இத் தடையுத்தரவு கோரும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2021.11.19ம் திகதி தொடக்கம் 2021.11.27ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலும் மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் யுத்தத்தில் மரணித்த தடை செய்யப்பட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூரும் முகமாக மட்டக்களப்பு ஆயரகத்தின் அதி வணக்கத்துக்குரிய பேராயர் பொன்னையா ஜோசப் என்பவருடைய தலைமையின் கீழ் விளக்கேற்றி நினைவு கூரல் மற்றும் வழிபாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக புலனாய்வுத் கவல்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
அதே போன்று மேற்கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழீழ விடுதலை இயக்கத்தின பிரதித் தலைவர் பிரசன்னா இந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் அமைப்பின் இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் ஆகியோருக்கும் அவர்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை