கிண்ணியாவில் படகு பாதை கவிழ்ந்ததில் 6 பேர் பலி.!
(வடமலை ராஜ்குமார்)
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட. 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை (23) பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் சுமார் 20 க்கும் மேற்பட்டேர் பயணித்துள்ளனர்.
பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கிண்ணியா நகர சபை பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலமாகும்.
பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை