எதிர்வரும் 6ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்!

மே 6 ஆம் திகதி காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார பணியாளர்கள் தவிர அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர்.
அனைத்து அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் சேவைகள் நடத்தப்படும் என்றும், பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்க விசேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தொழிற்சங்கங்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளன.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக காலை 9 மணி முதல் சுகாதார அமைச்சு மற்றும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் எதிரே ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.