April 13, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசுக்கு எதிராக 32 சிவில் அமைப்புக்கள் போர்க்கொடி – கொரோனா தடுப்பு என்ற பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்காதீர் என கோட்டாவுக்குக் கடிதம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிக்கின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு 32 சிவில் அமைப்புக்கள்  ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று விசேட கடிதம் அனுப்பி வைத்துள்ளன. 'தொற்று ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் ஊழியர்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு

தற்போது உலகையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பூராகவும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை மேற்கொள்ளும் கரைச்சி பிரதேச சபையின் ஊழியர்களுக்கு அவர்களின் சேவையை ஊக்குவிக்கும் முகமாக உலருணவுப் பொருட்கள் ...

மேலும்..

ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும்..

கொழும்பில் 45 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியான விபரம் இதோ..!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 214 நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. அந்தவகையில் மாவட்ட ரீதியாக இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி நிலைவரப்படி, கொழும்பில் 45 பேரும், களுத்துறையில் 37, புத்தளத்தில் 34, கம்பஹாவில் 24 ...

மேலும்..

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாம் நிலைமை குறித்து ஆராய்வு

பாறுக் ஷிஹான்  கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அழைத்துவரப்படும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரினால் பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல்  முகாம் நிலைமை குறித்து ஆராய்வதற்காக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்துள்ளனர். கடந்த ...

மேலும்..

ஜுன் இறுதியில் பொதுத்தேர்தல்? தேர்தல் ஆணைக்குழு பரிசீலனை

நாடாளுமன்றத் தேர்தலை ஜுன் மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருகின்றது என அரசியல் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு மே மாதம் ஆரம்பத்தில் அறிவிக்கப்படின் தேர்தல் பரப்புரைக்கு 45 நாட்கள் வழங்கப்பட வேண்டும். ...

மேலும்..

கொரோனா வதந்தி: மேலும் 7 பேர் கைது – சி.ஐ.டியின் வேட்டையில் இதுவரை 16 பேர் சிக்கினர்

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் மேலும் 07 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைதுசெய்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு!

கொரோனா வைரஸ் பரபுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்களுக்கு இந்த ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு இலங்கை இராணுவத்தினரும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து வறிய மக்களுக்கு கடல் உணவுகளை வழங்கும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில், ...

மேலும்..

சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

  "நாட்டில் கொரோனா வைரஸால் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, நாம் ஒவ்வொருவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குப் பொறுப்புடன் செயற்படவேண்டும். இல்லையேல் நாம் பல இக்கட்டான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். பேரிழப்புக்களைக் கூடச் சந்திக்க வேண்டி வரும்." - இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா ...

மேலும்..

சித்திரைப் புத்தாண்டையொட்டி பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை!

தமிழ் - சிங்களப் புத்தாண்டையொட்டி இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவுள்ளனர். இந்தக் காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் கைதுசெய்யப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு ...

மேலும்..

கொரோனா தொற்று சந்தேகத்தில் மேலும் 32 பேர் ஒலுவில் முகாமுக்கு – இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

ஜா - எலப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகிய மேலும் 32 பேர் இனங்காணப்பட்டு ஒலுவில் கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் இவர்கள் 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் இரத்த மாதிரிகள் ...

மேலும்..

தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிஸார் இடைநிறுத்தம்: இந்தியப் பொலிஸாரின் பாணியா???

கொழும்பு டார்லி வீதியில் நேற்று ஊரடங்குச் சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரைப் பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியப் பொலிஸாரின் பாணியில் செயற்பட முனைந்த குறித்த இருவர் ...

மேலும்..

கொரோனா குறித்து பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக முறைப்பாடு

கொரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலைவரம் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பனுக்கு நிர்ணய விலை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 125 ரூபாயினை நிர்ணயிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இரண்டு நெல்வகைகளிலும் பெறப்படும் தீட்டுப்பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து மேலும் 60 பேர் வீடு இன்று திரும்பினர்!

கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மேலும் 60 பேர்  இன்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 15 பேர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். அவர்கள் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, பண்டாரகம பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்கு வடக்கில் தனித் தீவு! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

"கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் எவராவது சட்டவிரோதமாக ஊடுருவினால் அவர்களைத் தடுத்து வைப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் வடக்கில் தீவொன்று உள்ளது." - இவ்வாறு கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 147 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ...

மேலும்..

கொரோனா தொற்று 214 – மேலும் நால்வர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 210 இலிருந்து 214 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 56 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் 151 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 117 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் ...

மேலும்..

இத்தாலி, ஸ்பெயினுக்கு மீட்சி கிட்டுகிறது: உலகம் முழுவதும் 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு!

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்படும் மரணங்கள் நேற்று சற்றுக் குறைவடைந்துள்ளன. இந்த வைரஸால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உயிரிழப்புக்கள் நேற்றைய நாளில் குறைந்துள்ளன. சீனாவில் ...

மேலும்..

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று வீடு திரும்பியுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரு வாரங்களுக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக ஆயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைப்பு…

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக  இலவசமாக ஆயிரம் முகக் கவசங்கள் கல்முனையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு   வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் செயலாளர் ரி.ஜே அதிசயராஜ்   வழிகாட்டலின்   கல்முனை 2  சமுதாய அடிப்படை சங்கங்களின்  பிரிவிற்குட்பட்ட ...

மேலும்..

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இரு சந்தேக நபர்கள் கைது!

பாறுக் ஷிஹான்    கொரோனா  வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு  உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு  கடமைக்கு சென்ற  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இரு   சந்தேக நபர்களை   கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன்  கைது செய்துள்ளதாக  கல்முனை ...

மேலும்..

தான் மரணித்தால் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாமென கூறியவரின் ஜனாஸா ஓட்டமாவடியில் நல்லடக்கம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) சுமார் மூன்று மாத காலமாக குடும்ப உறுப்பினர்களால் கவனிப்பாரற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதுடைய நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மரணமடைந்தார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த இந் நபர் சுமார் மூன்று மாதத்திற்கு முன்னர் திடீர் சுகவீனமுற்ற ...

மேலும்..

மன்னாரில் இடைநிறுத்தப்பட்டிருந்த காற்றாலை மின் உற்பத்தி அபிவிருத்தி திட்டம் மீண்டும் ஆரம்பம்:மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோன்றாஸ் ஊடகசந்திப்பு.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) ஒரு வாரம் கொனோரா காரணமாக முடக்கப்படிருந்த மன்னார் தாராபுரம் கிராமம் கடந்த ஞாயிறுடன் (12.04.2020) விடுவிக்க மன்னார் அரசாங்க அதிபர் சிபாரிசு செய்துள்ளார். மன்னாரில் மின்சார தேவையை முன்னிருத்தி சில நிபந்தனைகளுடன் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் ...

மேலும்..

வவுனியா வடக்கில் வறுமைக்கோட்டுகுட்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்  தின தொழில் மூலம் வருமானம் பெறும் சுமார் 2000 மேற்பட்ட குடும்பம்பங்களுக்கு புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஊடாக 1000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திடம் கையளிக்கபட்டு கடந்த ...

மேலும்..

மாவையின் நிதியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவு பொதிகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதியில் வலி.வடக்கு தெல்லிப்பழை பகுதியில் உள்ள துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் பகுதிகளைச் சேர்ந்த 60 குடும்பங்கபளுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. வலிகாமம் ...

மேலும்..

நிந்தவூர் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான 3 சந்தேக நபர்களை தொடர்விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு!!

பாறுக் ஷிஹான் வீடொன்றில் போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைதான  3 சந்தேக நபர்களை தொடர்விசாரணை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கி உள்ளது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திற்கு கடந்த 11 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருட்கள் பொதி ...

மேலும்..

 கண்டபடி கவர்ச்சி காட்டும் பிகில் நடிகை காயத்ரி.. கில்மா நடிகையாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி கடந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படமாக தமிழ் சினிமாவை கலக்கிய படம் பிகில். விமர்சக ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் வசூல் ரீதியாக ஏகபோக வரவேற்பை பெற்று வெற்றி ...

மேலும்..

மாஸ்டர் முதல் நாள் வசூலை கணித்த விநியோகஸ்தர்கள்.. இது நடந்தால் தளபதி வேற லெவல் போறது உறுதி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய்தான் வசூல் மன்னன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனை பல தயாரிப்பாளர்களும் பட வினியோகஸ்தர்களும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹப்புத்தலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இணைக்கப்பட்ட நபரொருவர் அங்கிருந்து மேலும் இருவருடன் தப்பியோடி, லொறி ஒன்றில் பயணித்துள்ளார். இந்தநிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு, பெரகல நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும், தியத்தலாவை இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 07 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளதாக னர் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 11 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அன்பரால் யாழ். முஸ்லிம்களுக்கு உலர் உணவுகள்…

- தவம் அறக்கட்டளை நிலையத்தின் முன்மாதிரி கொரோனா தொற்று அச்சம் ஏற்படுத்தி உள்ள அசாதாரண சூழல் காரணமாக யாழ். மாவட்டத்தில் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அந்தரிக்கின்ற வறிய மற்றும் வருமானம் இழந்த ஒரு தொகை முஸ்லிம் குடும்பங்களுக்கு முற்போக்குவாதி தவம் ஞாபகார்த்த அறக்கட்டளை நிலையத்தால்  நிவாரண பொருட்கள் கடந்த தினங்களில் வழங்கி வைக்கப்பட்டன. தவராசாவின் ...

மேலும்..

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020…

13.04.2020 இரவு சார்வரி புத்தாண்டு பிறக்கிறது. அனைவருக்கும் இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடிமைத் தளையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள் “கோவிட்-19 (covid-19) உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள். எழுந்து நில்லுங்கள். அறுகு, துளசி,வேம்பிலையுடன் மஞ்சள் கலந்து நன்றே ...

மேலும்..

இந்த கொரோனா நுண்உயிரி பரவுவதற்கு சீனாதான் காரணம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது…

இந்த கொரோனா நுண்உயிரி பரவுவதற்கு சீனாதான் காரணம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது. சீனர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும் உணவு தொடர்பாக அவர்கள் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறார்கள். ஊர்வன, நீந்துவன, நடப்பன, பறப்பன என எதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. ...

மேலும்..

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமையில்! – முழங்காவில் கடற்படை முகாமுக்கு அனுப்பிவைப்பு…

ராகம மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் 27 பேர் மன்னார், முழங்காவில்  கடற்படை முகாமில் உள்ள  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராகமை வைத்தியசாலை எனக் கூறப்படும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும், வெலிசறை சுவாச நோய்க்கான ...

மேலும்..

கொரோனாவின் தொற்றிலிருந்து மீண்டது நான்கு மாதக் குழந்தை…

இலங்கையில் கண்டறியப்பட்ட மிகக் குறைந்த வயதுடைய கொரோனா தொற்றாளரான புத்தளம் மாவட்டம், சிலாபம் - நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தை பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியது. குறித்த குழந்தையின் பாட்டன் ஊடாக அக்குழந்தைக்கு கொரோனா தொற்று பரவியிருந்த நிலையில், ...

மேலும்..

இதுவரை 56 பேர் குணமடைவு; 147 பேர் வைத்தியசாலைகளில்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

210 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று மட்டும் 12 பேர் பாதிப்பு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் அண்மையில் அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கட்டாரிலிருந்து வருகைதந்திருந்த – ...

மேலும்..