May 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்? – விக்னேஸ்வரன் கேள்வி

இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்? என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மே 18 அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன், ...

மேலும்..

யாழ். பல்கலைக்குத் தகுதியான துணைவேந்தரைத் தேடுவதற்கு குழு நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்திலேயே மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட ...

மேலும்..

பெற்றோல் விலையில் திடீர் மாற்றம்

ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் ஐந்து ரூபாவால் குறைத்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,068 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா ...

மேலும்..

யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய குருக்களை மாற்றியதால் குழப்ப நிலை

யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் உரிமையாளர் என கூறப்படும் குருக்களை மாற்றியதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், ஆலய நிர்வாகம் இயங்கவில்லை. ஆலயத்திற்கு தனிப்பட்ட நபர்கள் சிலர் உரிமை கோரி வருகின்றனர். இதன் காரணமாக ஆலயம் தொடர்பான வழக்கு ...

மேலும்..

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், பேரீச்சம்பழம், பருப்பு, சீனி, வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோடம்பழம்,எலுமிச்சை,திராட்சை மற்றும் அப்பிள் ஆகியவற்றுக்கான தீர்வைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. அத்துடன் யோகட், செத்தல் மிளகாய், வேர்க்கடலை ...

மேலும்..

பொதுத்தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு!

பொதுத்தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையிலேயே மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தினால் எதிர்வரும் ...

மேலும்..

முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் – விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் மீட்பு

கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த ...

மேலும்..

கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா தொற்று

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட ...

மேலும்..

வவுனியாவில் பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் மண் அகழ்வு நிறுத்தம்

வவுனியா – செட்டிகுளம் கல்நாட்டியில் மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு, பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலுள்ள ஐந்து குளங்களின் கீழ் 320 ஏக்கர் பரப்பில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த ...

மேலும்..

சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களுக்கான கால எல்லை நீடிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலத்தைத் தற்காலிகமாக நீடிக்கப் போக்குவரத்து சேவைகளின் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த காலஎல்லை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, ஏப்ரல் 16ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான செல்லுபடியாகும் காலம் மே ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி ...

மேலும்..

பொதுத் தேர்தலை நடத்த முடியும் – உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ...

மேலும்..

கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 16 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 13 கடற்படையினர் உள்ளடங்கும் நிலையில், குணமடைந்த ...

மேலும்..

காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்று(21) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடைய ஜயவிக்கிரம என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. உயிரிழந்தவர் சுவாசப் பிரச்சினை காரணமாக இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இறந்தவரின் ...

மேலும்..

கிளிநொச்சியில் பொலிஸ் விடுதி மீது மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி காயம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விடுதி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வீசிவரும் கடும் காற்றினால் பல்வேறுப்பட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை இராமநாதபுரம் பொலிஸ் ...

மேலும்..

வெளிநாட்டிலுள்ள 350 இலங்கையர்களுக்கு கொரோனா

ஜே.எப்.காமிலா பேகம்-வெளிநாடுகளில் உள்ள 350க்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. இதில் அதிகமானவர்கள் ஐக்கிய அரபு இராஜியத்தில் உள்ளவர்கள் என்றும் அந்தப் பணியகம் குறிப்பிட்டது. அந்த நாட்டில் 200க்கும் அதினமான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சவூதியில் 21 ...

மேலும்..

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

அம்பாறை –  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். பிரவச வலி என தெரிவித்து, 28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை)  குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ...

மேலும்..

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீண்டும் ஒரு பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்

பாறுக் ஷிஹான் ஒரே சூலில் 3 குழந்தைகளை கோமாரி பகுதியை  சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(21) நண்பகல்    அம்பாறை மாவட்டம் கல்முனை  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது. வியாழக்கிழமை(21)   பிரவச வலி என 28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த  பெண் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன்னை பலசாலியாக காண்பிப்பதற்கு முயல்கின்றது – மகிந்த சமரசிங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன்னை பலசாலியாக காண்பிப்பதற்கு முயல்கின்றது என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தினைக் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனக்கு அரசியல் செல்வாக்கு இல்லாத நிலையிலும் ...

மேலும்..

பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் நான்காவது நாளாக நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, இன்று காலை 10 ...

மேலும்..

சீரற்ற வானிலை – 20 ஆயிரத்து 265 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 356 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தங்களினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், ...

மேலும்..

ரஷ்யாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக ரஷ்யாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான மேலும் இரண்டாயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

ஊரடங்கு சட்டத்தினால் கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான மேலும் இரண்டாயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு தெற்கு பொலிஸ் பிராந்தியத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தவர்களே இவ்வாறு நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீயில் எரிந்து நாசம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீப்பற்றி எரிந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பாசிக்குடா முருகன் ஆலய வீதியிலுள்ள அரச காணியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா கிராம சேவை அதிகாரி க.கிருஷ்ணகாந் ...

மேலும்..

கொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார். வறுமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நகரப்பகுதிகளில் வாழும் வறிய மக்களே இவ்வாறு ...

மேலும்..

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை – மகிந்த தேசப்பிரிய

அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிதி உதவியை நிறுத்துமாறு தாம் ஒருபோதும் வேண்டுகோள் விடுக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும் 5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் தன்மை கொண்டவையாக காணப்பட்டதால் குறிப்பிட்ட திட்டத்தினை அரசியல் கட்சியோ ...

மேலும்..

நாளை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அத்துடன், ...

மேலும்..

அம்பாறையில் கடலரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தெரிவித்தார். தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், நிந்தவூர் பகுதியில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று (வெள்ளிக்கிழமை) காலை பார்வையிட்டதன் பின்னர் ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சபையை கட்டியெழுப்ப ஜனாதிபதியிடமிருந்து முன்மொழிவுகள்

இலங்கை போக்குவரத்து சபையை, இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சபையின் ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1136 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1136 மில்லியனாக அதிகரித்துள்ளது. Canowin Hotel @ SPAS (Pvt) Ltd நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான ...

மேலும்..

இடைத்தரகர்களை நீக்கி மருந்து விநியோகத்தை முறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுடன் மருந்துப் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் கேட்டறிந்தார். நாட்டினுள் மருந்து விநியோகம் எப்படி இடம்பெறுகிறது என ஜனாதிபதி வினவியதற்கு பதிலளித்த அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் ...

மேலும்..

சுமந்திரனுக்கு நன்றி பாராட்டிய நிந்தவூர் பிரதேசசபை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோரின் ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது நிந்தவூர் பிரதேச சபையின் 26 வது மாதாந்த கூட்ட அமர்வு வியாழக்கிழமை (21) பிரதேச சபையின் பதில் ...

மேலும்..