May 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு தமிழ் மரபுக் காவலர் விருது வழங்கி கௌரவம்!

இணுவில் மண்பெற்றெடுத்த தமிழுக்குப் பெருமைசேர்த்து தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு கனடா தமிழ்ர் மரபு மாநாட்டு அமைப்பு ''தமிழ் மரபுக் காவலர்'' என்ற விருதை 2 ஆவது தமிழர் மரபு மாநாட்டில் வைத்து வழங்கிக் கௌரவித்துள்ளது. இணுவை மண் பெற்றெடுத்த பண்டிதர் ...

மேலும்..

செவ்வாய்க்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இயக்க திட்டம்

சுகாதார பிரவினரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இயக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ...

மேலும்..

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணை!

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கு விசாரணைகளில் ஏற்பட்ட தாமதங்களை தவிர்ப்பதை இதன் நோக்கமாகும். இதற்கமைய, எதிர்வரும் 30ம் திகதி சனிக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 13ம் திகதி ...

மேலும்..

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 33 கடற்படையினர் உள்ளிட்ட மேலும் 40 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு தொற்று உறுதியாகியவர்களில் 283 ...

மேலும்..

இராணுவ பதவி உயர்வுகள் தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா? – ஜஸ்மின் சூக்கா

இராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளானது, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் கூட இல்லை என்ற செய்தியையே அனுப்புவதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ ...

மேலும்..

இலங்கையர்களை அழைத்துவர பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டது விசேட விமானம்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானமொன்று பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானம் பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 1422 ...

மேலும்..

தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் சம்பளத்தை இழந்துள்ள வேட்பாளர்களாக களமிறங்கிய அரச உத்தியோகத்தர்கள்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள், சுயேட்சைக்குழுகளில் வேட்பாளர்களாக களமிறங்கி வேட்புமனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பலர் இன்று தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு வருவதால் தமது சம்பளங்களை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர் . கொரோனா தொற்று காரணமாக தேர்தல் இடம்பெறும் திகதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட கடந்த பங்குனி மாதம் 19 ஆம் திகதியில் இருந்து ...

மேலும்..

ஓமந்தையில் புதையல் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள்

ஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாரியளவிலான தேடுதல்  நடத்தப்பட்டது. எனினும் புதையல் எவையும் மீட்கப்படவில்லை. குறித்த காணியில் சில மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தலைமைகளே காரணம் – டக்ளஸ்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த கால தமிழ் தலைமைகளும் தற்போதைய தலைமைகளும்தான் காரணமாக உள்ளனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அலுவலகம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் வைபவ ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதை நிறுத்தியது குற்றம் – சம்பிக்க ரணவக்க

கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களிற்கு 5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதை நிறுத்தி, அரசாங்கம் கடுமையான குற்றத்தை புரிந்துவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், 5000 ரூபாய் கொடுப்பனை ...

மேலும்..

இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது – இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு ...

மேலும்..

கொரோனா பரவலுக்கு மத்தியில் புதிதாகப் பரவும் நோய் – குழந்தைகளுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கவாசாகி (Kawasaki)  என்ற நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு Lady Ridgeway வைத்தியசாலையின் விசேட வைத்திய ...

மேலும்..

கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் இன்று (சனிக்கிழமை) வெலிக்கந்த மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு

நாடுமுழுவதும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. குறித்த தினம் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ...

மேலும்..

நாட்டில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,085 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 416 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும்..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் நிஸ்ஸங்க சேனாதிபதி

அவன்கார்ட் வழக்கு தொடர்பில் அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவன்கார்ட் நிறுவனத்தை முறையற்ற விதத்தில் ...

மேலும்..

சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு அம்மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் காணப்படும் மாவட்ட பொது வைத்தியாசலைகள், ...

மேலும்..

சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை

யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் ...

மேலும்..

கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகள் – மக்கள் விசனம்

கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவு வேளைகளில் இனந்தெரியாத நபர்களால் பெருமளவு கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் குறித்த காணியில் குப்பைகள் ...

மேலும்..

நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் – பொலிஸார்

நாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் விசேட கடமை நேரத்தின் அடிப்படையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் விசேட ரோந்து நடவடிக்கைகளும் ...

மேலும்..

ரணில் – சஜித் தரப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு!

பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியை அதன் கூட்டணியில் சேர்க்கும், ஆனால் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை வைத்திருப்பவர்களை தூக்கி எறியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார். “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய ...

மேலும்..

வெடுக்குநாரிஆலய நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு – நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை

வவுனியா – வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக புதிய பிரிவின் கீழ் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தபோதிலும் ஏற்கனவே ...

மேலும்..

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 51 ஆயிரத்துக்கு 94 பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் இந்தப் பணியகத்தினால் 1,970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான பரிசோதனை என ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் குறித்த தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் இதன்போது அவர்களுக்கு வழங்கி ...

மேலும்..

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 680 மில்லியன் செலவில் விசேட வசதி – கல்வி அமைச்சர்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகளிலும் வெப்பநிலையை கண்டறியும் சாதனங்கள், கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் மற்றும் விசேட அறைகள் ஆகியவை அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதற்காக 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு ...

மேலும்..

வவுனியா தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர்கள்

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் பெரியகட்டு இராணுவ முகாம் போன்ற கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு 276 கடற்படை வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 40க்கும் மேற்பட்ட பேருந்துகளின் மூலம் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் வவுனியா ...

மேலும்..

பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை

பாறுக் ஷிஹான்   கொள்ளை தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸாருக்கு  ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையான காலப்பகுதியில்  ரூபா 11 இலட்சம் ...

மேலும்..

ராஜிதவுக்கு விடுதலை வேண்டி சஜித் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!

வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரால் களுத்துறை நகரில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ...

மேலும்..

தேர்தலை நடத்துவது எப்படி? கட்சிகளிடம் ஆலோசனை கேட்கின்றார் தேசப்பிரிய!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக  சுகாதாரப் பிரிவினரோடு கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளமையால் பிரசாரப் பணிகள் கைக்கொள்ளப்பட வேண்டிய  முறை குறித்த அரசியல் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய - எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ...

மேலும்..

கொரோனா போரை வென்ற பின்பே பாடசாலைகள் மீளத் திறக்கப்படும்! – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

"கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றியீட்டியதன் பின்னரே பாடசாலைகள் மீளத்திறக்கப்படும்" என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கொரோனாவுடனான போராட்டத்தை முடித்து நாங்கள் பாடசாலைகளை மீளத் திறப்போம். மாணவர்களை மீண்டும் பாடசாலைகளுக்குக் கொண்டு வருவோம். போராட்டத்தின் ஆரம்பமும் போராட்டத்தின் முடிவும் ...

மேலும்..

உயர்நீதிமன்றத்துக்கு சவால்விட்டு மைத்திரி போல் அவமானப்படாதீர் – கோட்டாவுக்கு மங்கள அறிவுரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல் இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உயர்நீதிமன்றத்துக்குச் சவால்விட்டு அவமானப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற ...

மேலும்..

ராஜபக்ச அரசுக்கு பொன்சேகா எச்சரிக்கை!

"சர்வதேச அமைப்புகளை அல்லது சர்வதேச நிறுவனங்களைச் சீண்டும் வகையில் ராஜபக்ச அரசு செயற்பட்டால் அவர்கள் மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் ...

மேலும்..

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது! – மஹிந்த அணி சொல்கின்றது

"உயர்நீதிமன்றத்தில் எதிரணியினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரகாரம் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவிப்பையும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஜூன் 20ஆம் திகதி ...

மேலும்..

மத்தள, இரத்மலானை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு விமான நிலையங்களில் சேவைகள் மீள ஆரம்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தொடர்ந்து மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுக்கப் பல மாற்று நடவடிக்கைகளில் அரசு ...

மேலும்..

முப்படையினரில் 612 பேர் கொரோனாவுக்கு இலக்கு! – 600 பேர் கடற்படையினர்

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 612 பேர் முப்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 600 பேர் கடற்படையினர் எனவும், 11 பேர் தரைப்படையினர் எனவும், ஒருவர் விமானப் படையைச் சேர்ந்தவர் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனாவால் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள்! தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என மஹிந்தவிடம் சங்கா, மஹேல நேரில் வலியுறுத்து

"வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும்." - இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் கூட்டாகக் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்வுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 350 இற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதிகமான நோயாளிகள் ஐக்கிய அரபு எமிரகத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 200 இற்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

மேலும்..

கிழக்கில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் ஜனாதிபதி செயலணி

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர் என்றும் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த காலப்பகுதியில், 138 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் ...

மேலும்..

கொடுப்பனவு நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சியே காரணம் என்கின்றார் பிரதமர்

கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களிற்கு 5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவிடம் எதிர்கட்சிகள் மனுத்தாக்கல் செய்த காரணத்தினாலேயே கொடுப்பனவு நிறுத்தப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்த ...

மேலும்..

ரஷ்யாவில் சிக்கித்தவித்த 260 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கித்தவித்த 260 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 260 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்நிலையில் நாடு ...

மேலும்..