May 27, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையில் தாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1469 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 150 கொரோனா நோயாளிகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களுள் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான 8ஆம் நாள் விசாரணை இன்று

ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் எட்டாவது நாளாகவும் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புனவேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, பியந்த ஜயவர்தன மற்றும் ...

மேலும்..

மலையகத்தின் மிடுக்கு மரணித்துப் போனது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் மலையக மக்களின் வாழ்வுரிமையையும் அரசியல் அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்த மாமனிதர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் பேரனாக அவரது பொறுப்புக்களை சுமந்து மலையகத்தின் மிடுக்காக வலம்வந்த ஒரு அரசியல் ஆழுமையான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பின்மூலம் மலையகத்தின் மிடுக்கே இன்று ...

மேலும்..

அமரர் ஆறுமுகம் தொண்டமான் விடுதலைப்புலிகள் மீதும் மதிப்பு வைத்து செயல்பட்டவர்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ,

அமரர் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களுக்கு மலைபோல் அரணாக இருந்து செயல்பட்டாலும் விடுதலைப்புலிகள்மீதும் மதிப்பு வைத்து செயல்பட்டவர் அவரின் இழப்பு வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கும் பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் வதிவிடத்தில் பூதலுடல் நேற்று ...

மேலும்..

வவுனியா வெடிவிபத்தில் சிறுவர்கள் இருவர் காயம்!

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த ராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிகொண்டிருந்த இரு சிறுவர்கள் இனம் தெரியாத பொருள் ...

மேலும்..

யாழ். மீசாலை சந்தியில் விபத்து – மூவர் படுகாயம்

தென்மராட்சி-மீசாலை சந்திப் பகுதியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் -துவிச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை சந்தி ஊடாக துவிச்சக்கரவண்டியில் சிறுவன் ஏ-9 வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் யாழில் இருந்து கொடிகாமம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ...

மேலும்..

நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ...

மேலும்..

இன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு

இலங்கையில் இன்றைய தினம் இரவு 8.00 மணிவரையான காலப்பகுதியில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 134பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை மொத்தமாக 1,453 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று இனங்காணப்பட்ட நோயாளர்களில் 81 பேர் வெளிநாடுகளிலிருந்து ...

மேலும்..

அச்சுவேலியில் மரம் அரியும் நிலையத்திற்கு விசமிகள் தீ வைப்பு

அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் ...

மேலும்..

அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்!

நக்கீரன் இந்த மாதத் தொடக்கத்தில் (மே 08)  சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என அறிக்கையொன்றை விட்டுள்ளார்  தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன். இது  தொடர்பாக அவர் வெளியிட்ட  அறிக்கையில் "கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை காலை 11.45 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்படவுள்ளது. அதேநேரம் அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோர்வுட்டில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. திடீர் உடல்நலக் குறைவினால் அமைச்சர் ஆறுமுகன் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு இலங்கை மக்களுக்கு பேரிழப்பு- தமிழக முதலமைச்சர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு  அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தரமற்ற கட்டடப்பணிகள் இடம்பெற்று வருவதாக மக்கள் சாடல்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தரமற்ற கட்டடப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த கட்டுமான பணியில் தமக்கு திருப்தி இல்லை என வீட்டுத்திட்ட பயனாளிகள் அதிருப்தி வெளியிடுகின்றனர். குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 668 வீடுகள் கட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2017ம் ...

மேலும்..

38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி

கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் – ஸ்ரீதரன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த ...

மேலும்..

ராஜித சேனாரட்னவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இன்று (புதன்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதற்கமைய ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பிணை மனு தொடர்பான தீர்மானம் ...

மேலும்..

குகுலே கங்கையின் இரு வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக குகுலே கங்கையின் இரு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. வெத்தாகல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக, குகுலே கங்கை ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இரா.சம்பந்தன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 712 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1319 ...

மேலும்..

மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது – இரா.சம்பந்தன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பு – வேலுகுமார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார். அவர் ...

மேலும்..

கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடுங்கள் – மனோ வலியுறுத்து!

கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனரீதியாக கூர்மையாக்கப்பட்டுள்ள ...

மேலும்..

கொரோனா குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்களில் பொய் இல்லை – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் பிழையானவை வேண்டுமென்றே குறைத்து காண்பிக்கப்படுபவை என சுயாதீன தொழில்சார் நிபுணர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையில், இலங்கையில் தற்போது ...

மேலும்..

இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. உரும்பிராய் பகுதியில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, ...

மேலும்..

யாழில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் வீடு திரும்பினார்

யாழில். கொரோனா தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்த ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார். சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்னவின் பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜித சேனாரட்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார். சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்னவின் பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் ...

மேலும்..

ஹிஜாஸ் ஹில்புல்லா குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கரிசனை கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹில்புல்லா தொடர்பாக  ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு கரிசனை கடிதமொன்றை எழுதியுள்ளது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு தனது ருவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தடைச்சட்டத்தின் ...

மேலும்..

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (புதன்கிழமை) காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இரண்டு வாரங்களின் பின்னரே தீர்மானம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், பொது மக்கள் என பலரும் ...

மேலும்..

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் – வீட்டிலிருந்தவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசியப்பிட்டியில் நீண்டகால பகை காரணமாக இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட குழு ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அந்த வீட்டிலிருந்த ஒருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலில் வீட்டிலிருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

“மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்” – ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஸ்டாலின் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் இந்திய ...

மேலும்..

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒயாது ஒலித்த குரல் மௌனித்து விட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும், ஆறுமுகன் ...

மேலும்..

யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார். வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே இன்று (புதன்கிழமை) குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை!

கொவிட் 19 நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகவுள்ள அல்லது பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது. இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ...

மேலும்..