May 28, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

“மக்களே முதன்மையானவர்கள்“ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது – ஜனாதிபதி!

“மக்களே முதன்மையானவர்கள்“ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கனடா, ஜமைக்கா மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் -19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட ...

மேலும்..

பெலாரஸுல் இருந்து 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பெலாரஸ் நாட்டில் இருந்து 277 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். குறித்த பயணிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பெலாரஸ் மின்ஸ்க் நகர் விமான நிலையத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் 775 பேர் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல்

வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை ...

மேலும்..

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக் இன்று (வியாழக்கிழமை) கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண் ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார். சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களுக்கு தமது விஜயம் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் அவர்கள் கருத்து ...

மேலும்..

தோட்ட மக்களிடையே பயங்கரவாதத்தை அனுமதிக்காத பெருமை தொண்டமானையே சாரும் – பிரதமர்

தோட்ட மக்களிடையே பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை அனுமதிக்காத பெருமை மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானையே சாரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்

யாழ். தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கி செல்லும் அடியவரின் ...

மேலும்..

முகக் கவசம் அணிவது குறித்து சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு

இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு முகக் கவசம் அணிவதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பது குறித்த சுகாதார அமைச்சு 46 வகையான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. குறித்த ஆலோசனைகளிலேயே இந்த விடயம் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு ஏற்படுவது தொடர்பாக இவ்வாறு 2 ...

மேலும்..

யாழில் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி

யாழில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டஅரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அஞ்சலி செலுத்தினர்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் அஞ்சலி

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு இன்று (வியாழக்கிழமை) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரபுரம் மக்களின் ஏற்பாட்டில் சிவகாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில், அன்னாரது ஒளிப்படத்திற்கு நினைவு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 13 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதற்கமைய இதுவரை 745 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை 1469 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 714 பேர் ...

மேலும்..

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு

நாட்டில் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களை ஆன்மீக இறை வழிபாடுகளிலும் ஈடுபட அனுமதியுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிலுள்ள  வழிபாட்டிடங்களைத் திறக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் ...

மேலும்..

போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் களனி புலுகங்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான ஆயிரத்து 900 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. களனி பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ...

மேலும்..

தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த விசாரணைகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு

இலங்கை முழுவதும் எதிர்வரும் 31ஆம் திகதி  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அனுமதி!

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் – சிவசக்தி ஆனந்தன்

மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து ...

மேலும்..

மேலும் 7 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்!

மேலும் 7 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். கடற்படை பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரையில் 351 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் விரைவில் தகுதியுடையவரால் நிரப்பப்பட வேண்டும் – சி.வி.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் விரைவில் தகுதியுடையவரால் நிரப்பப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அவர் மேலும் ...

மேலும்..

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் வருடாந்த கும்பாபிசேக தின மகா சங்காபிசேகம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிசேக தின மகா சங்காபிசேகம் நேற்று(புதன்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக காணப்படுகின்றது. நேற்றைய தினம் விசேட பூஜைகளுடன் மாமாங்கேஸ்வரர் ஆலய ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது. இதில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக சகல ஆளுநருக்கும் ...

மேலும்..

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பான ஆலோசனைகள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நவ ஜீவன ரடாவக் உதேசா’ என கூறப்படும் புதிய வாழ்க்கை கட்டமைப்பு முறைக்காக என குறித்த ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த தொடர் ஆலோசனைகள் மூலம் ...

மேலும்..

மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்!

கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

தொண்டமானின் இறுதிக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிறார் மஹிந்த!

தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இந்த வியடத்தினைக் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ...

மேலும்..

ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை – அகிலவிராஜிற்கு பதில் வழங்கினார் சுஜீவ

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேறு கட்சிகளில் இணைந்துகொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய ...

மேலும்..

கோடீஸ்வரனுக்கு தமிழ் சி.என்.என். இன் பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட மக்களின் மனங்களை வென்றவரும் ஆகிய கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு இன்று பிறந்த தினம். இன்றைய இந்த நன்னாளில் கோடீஸ்வரன் அவர்கள் அரசியலில் மேலும் வளர்ச்சிப் படிநிலைகளை ...

மேலும்..

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 178 பேர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ...

மேலும்..

முக்கிய தகவல்கள் சிலவற்றினை வெளியிட்டது கல்வியமைச்சு!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,182 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,182 மில்லியனாக அதிகரித்துள்ளது. சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், பிலியந்தலை ஹெடிகம, ஸ்ரீ சுதர்ஷனாராமாதிபதி சங்கைக்குரிய நாகியாதெனியே ...

மேலும்..

கொரோனா குறித்து போலிப்பிரசாரங்கள் – விசாரணைகளுக்காக விசேட குழு

கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை பரப்பிய சுமார் 400 சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் கைது ...

மேலும்..

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் எதிர்வு கூறல்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ...

மேலும்..

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கலவான, இரத்தினபுரி, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொட, நிவித்திகல, ...

மேலும்..

அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க தொண்டமான் மறுத்தார் – ஜனாதிபதி!

அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினையடுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நலிவுற்ற ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று முற்பகல் 10.15 முதல் 11.30 வரையில் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் ...

மேலும்..

அஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கு தேவையான மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற தேர்தல் 2020 அரசியல்வாதிகள், முன்னாள் ஆளுநர்களுக்கான மெய் பாதுகாப்பு அதிகாரிகளை ...

மேலும்..