June 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசுக்குப் பெரும்பான்மையை வழங்கத் தயார் தமிழர்களின் அபிலாஷை நிறைவேறுமாயின்! வவுனியாவில் தெரிவித்தார் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பில் எமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களிற்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதல் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. கொரோனா வைரஸ் ...

மேலும்..

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1915 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவரும் ஈரானில் இருந்து ...

மேலும்..

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா? – அனில் ஜாசிங்க விளக்கம்

அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் ...

மேலும்..

சஜித்தைவிட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ‘மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி செல்கிறார்’ என்ற செய்தி சிங்கள ...

மேலும்..

டிரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா சேனை-மூவர் கைது

பாறுக் ஷிஹான் டிரோன் கமராவின் மூலம்  அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும்  வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர். செவ்வாய்கிழமை(16)  அதிகாலை கிடைத்த தகவலின்   மொனராகலை மாவட்டத்தில் தனமன்வில அடர்ந்த காட்டுப்பகுதிகளான  மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற ...

மேலும்..

ரணில் அணிக்கு 10 ஆசனங்கள்! சஜித் அணிக்கு 20 ஆசனங்கள்!! – மஹிந்த அணி ஆரூடம்

"நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வரலாறு காணாத படுதோல்வியைச் சந்திக்கும். ரணில் அணி வெறும்  10 ஆசனங்கள் மட்டுமே பெறும். அதேவேளை, சஜித் அணி 20 ஆசனங்களுக்கு ...

மேலும்..

ரணில் – சஜித் ‘டீல்’ மோதலால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பு வசமாகக்கூடும் – மஹிந்த அணி கணிப்பு

"அரசுடனான 'டீல்' தொடர்பில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தங்களுக்குள் மோதிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக அமையும். இதனால் பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றவும் கூடும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ...

மேலும்..

கோட்டா அரசுக்குக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கவே முடியாது – இப்படிக் கூறுகின்றார் தயாசிறி

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் பிரயோகிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுத்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே ...

மேலும்..

காட்டாட்சி மீண்டும் இங்கு தலைதூக்க இடமளியாதீர்! தேர்தலில் நல்ல பதிலை வழங்குமாறு மக்களிடம் கிரியெல்ல வேண்டுகோள்

  "நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாடு கட்டுப்பாட்டை இழந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட காட்டாட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்குத் தேர்தலில் மக்கள் சிறந்த பதிலை வழங்க வேண்டும்." - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

1915 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று – நேற்று 10 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 29 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றிரவு தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,371 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று ஈரானிலிருந்து வந்த 04 பேர், ...

மேலும்..

தபால்மூலமான வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டது

2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி முன்னாள் பா.உ யோகேஸ்வரன் ஜனாதிபதிக்குக் கடிதம்

கொரோணா தொற்று பரவல் காரணமாக சுகாதார விதிமுறைகளை பேணுதலைக் கருத்திற்கொண்டு இம்முறை கிழக்கிலிருந்து பாதயாத்திரை செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் அன்றைய ...

மேலும்..

வடக்கில் எத்தனை விதவைகள் உள்ளனர்? மக்கள் பிரதிநிதிகளே தரவு தரவேண்டும்! என்கிறார் உமாசந்திரபிரகாஷ்

வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள் இருக்கின்றார்கள் என மக்கள் ஆணை பெற்றவர்கள்தான் சரியான தரவுகளை கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார். 87 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள் என இன்னும் ...

மேலும்..

கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக ...

மேலும்..

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம்  நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த தீயணைப்பு வாகனத்திற்ன் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் ...

மேலும்..

வாக்குகளைச் சிதறடிக்கவே வன்னியில் பல அரசியல் கட்சிகள் – சாந்தி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னி மாவட்ட வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் திட்டமிட்டு பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

சி.ஐ.டி.யினர் எடுத்துச் சென்ற தரிஷா பஸ்ரியனின் மடிக்கணினியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்ட சண்டே ஒப்சர்வரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியனின் மடிக்கணினியில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய அரச பகுப்பாய்வாளருக்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கடத்தல் தொடர்பான விசாரணையில் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 29 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 29 பேர் குணமடைந்ததுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 1371 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

சிறைகளுக்குள் குற்றச் செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே ஜனாதிபதி செயலணி – பாதுகாப்பு செயலாளர்

பாதாள உலக கும்பல்களின் செயற்பாடுகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை சிறைச் சுவர்களுக்குள் இருந்து இயங்குகின்றன என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். அந்த தவறான செயல்களை கண்டறிவதற்கும் அவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஒரு பாதுகாப்பான நாட்டையும், ஒழுக்கமான, சிறந்த மற்றும் சட்டபூர்வமான சமூகத்தை ...

மேலும்..

சம்மாந்துறை பிராந்தியத்தில் SLPP கட்சி அங்கத்துவ அட்டை வழங்கி வைப்பு…

சம்மாந்துறை பிராந்தியத்தில் பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவ அட்டை அடையாள அட்டை வழங்கி வைக்கும்  நிகழ்வு (15) மாலை அக் கட்சியின்   சம்மாந்துறை தொகுதி வேட்பாளர் யு.எல் அஸ்பர் (ஜே.பி) அவர்களின் தலைமையில்  அவர்களின்  அலுவலகத்தில்  இடம் பெற்றது. இன் நிகழ்வில் உரையாற்றிய ...

மேலும்..

நுவரெலியாவில் பரீட்சார்த்த தேர்தல்…

(க.கிஷாந்தன்) தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு  பொதுத்தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனுபவத்தை  பெற்றுக்கொள்வதற்கான பரீட்சார்த்த தேர்தல் நுவரெலியாவில் பீட்று தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. காலை ஆரம்பமான வாக்களிப்பு நண்பகல் 12 மணிக்கு நிறைவுபெற்றது. தெரிவுசெய்யப்பட்டிருந்த 150 பேரில் 99 பேர் ...

மேலும்..

உமா-ஓயா திட்டம் : 85 ஈரானியர்கள் இலங்கைக்கு வருகை

உமா-ஓயா திட்டத்தில் பணியாற்ற 85 ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய விசேட விமானத்தில் இலங்கைக்கு அவர்கள் வந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ...

மேலும்..

தாமரைக் கோபுரம் விரைவில் மக்கள் பாவனைக்கு!

தாமரைக் கோபுரத்தின் சகல பணிகளையும் பூர்த்தி செய்து விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தாமரைக் கோபுரத்தின் வேலைத்திட்டங்களை மிகவும் பயனுள்ள முதலீடாக உயர்தரத்துடன் நவீன மயப்படுத்தி நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனுடன் தொடர்புடைய, ...

மேலும்..

தேர்தலுக்குப் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து முடிவு – அமெரிக்கா

ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த முடிவு எட்டப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியாளர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது என்ற ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி புத்தளத்தில் சடலமாகக் கண்டெடுப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கைச் சேர்ந்த ...

மேலும்..

கைத்தறி மற்றும் பற்றிக் துணிகளின் இறக்குமதிக்கு தடை!

கைத்தறி மற்றும் பற்றிக் துணிகள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. துணி மற்றும் ஆடை தொழிற்துறையினர் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ...

மேலும்..

தனது பெயரை மாற்றினார் அர்ஜுன் மகேந்திரன்!

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ´ஹர்ஜன் அலெக்ஸ்சான்டர்´ என மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை சட்ட மா அதிபர் விசேட நீதாய மேல் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை)   அறிவித்துள்ளார். அர்ஜுன் மகேந்திரன் கடந்த 2015 ஆம் ...

மேலும்..

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர். இதன்படி இதுவரையில் 740 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக  இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா ...

மேலும்..

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்ன செய்ததென பதிலளிக்கின்றார் சிறிநேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பானது சுமார் 70ஆண்டுகளாக தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளை கையாழ்வது மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கைப்பிரச்சினை அபிவிருத்தி சம்மந்தமான பிரச்சினைகளையும் தங்களுடைய கருத்தில் எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

சில மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு!

முதல்கட்டமாக  05 மாவட்டங்களுக்குரிய வாக்குச் சீட்டுக்கள் தற்போதைய நிலையில் அச்சிடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  அரசாங்க அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே  தெரிவித்துள்ளார். மேலும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் இரு தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அனுராதபுரம், பொலன்னறுவை, ...

மேலும்..

வாழைச்சேனை கடதாசி ஆலையில் வேலை பெற்றுதருவதாக சிலர் பொய் கூறுகின்றனர் – ஜெயானந்தமூர்த்தி

தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக மீறி   சில அரசியல் வாதிகள் வாழைச்சேனை கடதாசி ஆலையில் வேலை பெற்றுதருவதாக, வீடுகள் அமைத்து தருவதாக காணிகள் பெற்றுத்தருவதாக விண்ணப்பங்களை சேகரித்து மக்களுக்கு  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பிரச்சசாரங்களில் ஈடுபடுகிறார்கள் என ஸ்ரீ பொதுஜன பெரமுனை வேட்பாளரும் ...

மேலும்..

தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..